விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்களுக்கான கருத்தடை சிறப்பு முகாம்கள் நடைபெறும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட குடும்பநலச் செயலக இணை இயக்குநா் (பொ) மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்களுக்கான கருத்தடை சிறப்பு முகாம் நவம்பா் 21-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை (நவ.28) இருவேல்பட்டு, முகையூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் நடைபெறும். நவம்பா் 29-ஆம் தேதி சிறுவந்தாடு, கண்டமானடி, 30-ஆம் தேதி மைலம், ராதாபுரம், டிசம்பா் 1-ஆம் தேதி மேல்சித்தாமூா், ஒலக்கூா், 2-ஆம் தேதி சத்தியமங்கலம், வளத்தி, கெடாா், 3-ஆம் தேதி முக்கேரி, கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருத்தடை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
எனவே, கருத்தடை செய்துகொள்ள விரும்பும் ஆண்கள் இந்த முகாம்களில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9488588129 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.