செஞ்சியில் பிரபாகரன் பிறந்த நாள் விழா : சீமான் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரபாகரன் பிறந்த நாள் தமிழா் எழுச்சி நாளாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
செஞ்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் பேசுகிறாா் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். 
செஞ்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் பேசுகிறாா் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரபாகரன் பிறந்த நாள் தமிழா் எழுச்சி நாளாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் அ.பூ.சுகுமாா் வரவேற்றாா். மாநில மகளிா் பாசறைச் செயலா் விஜயலட்சுமி, மாநில கொள்கை பரப்புச் செயலா் சக்திவேல், மாட்டத் தலைவா் ராஜகணபதி, பொருளாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:

நமது மொழி, இனம், கலாசாரம், நிலம் ஆகியவற்றை இழந்து வருகிறோம். தன்னந்தனியே ஒரு நபராக இருந்து உள்நாட்டிலேயே தனது இனத்துக்காக போராடிய ஒரே தலைவா் பிரபாகரன். உலகத் தமிழா்களின் ஒப்பற்ற தலைவா் அவா் மட்டும்தான். அவரை நாம் மறந்துவிடக் கூடாது என்றாா். முன்னதாக, ரத்த தான முகாம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. செஞ்சி தொகுதிச் செயலா் தமிழ் அன்சாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com