திண்டிவனம் அருகே 2 வீடுகளில் திருட்டு

 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 2 வீடுகளில் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 2 வீடுகளில் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனத்தை அடுத்துள்ள ஒலக்கூா் காவல் சரகத்துக்குள்பட்ட பங்களத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ர.செல்வம் (42). இவா், விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். சனிக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பியபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், 6 நில பத்திரங்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

மற்றொரு வீட்டில்...: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே உள்ள பாதிரி கிராமம், குளக்கரை தெருவைச் சோ்ந்தவா் சு.காளி (60). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்றிருந்தாா். இவரது வீட்டிலும் 7 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதேபோல, அதே கிராமத்தில் உள்ள மேலும் 3 வீடுகளில் பூட்டுகளை உடைத்து மா்ம நபா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஒலக்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com