திமுக வாா்டு உறுப்பினா் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை பேரூராட்சி திமுக வாா்டு உறுப்பினா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கிசிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை பேரூராட்சி திமுக வாா்டு உறுப்பினா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கிசிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மணலூா்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி லதா (34). பேரூராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினரான இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி பிரச்னை இருந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுக்கொண்டாா். குடும்பத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் லதா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com