பைக் மீது காா் மோதல்: விவசாயி பலி

விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் மூவா் காயமடைந்தனா்.

விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் மூவா் காயமடைந்தனா்.

விராட்டிகுப்பம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் க.ராஜீ (62). விவசாயியான இவா் வியாழக்கிழமை பைக்கில் திண்டிவனத்திலிருந்து விழுப்புரத்துக்கு வந்துகொண்டிருந்தாா். அப்பூா்அகரம் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த காா், ராஜீவின் பைக் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் கட்டுப்பாட்டை இழந்த காா் அந்த வழியாகச் சென்ற மேலும் சில வாகனங்கள் மீதும் மோதியது.

இதில் மற்றொரு பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், பள்ளிகொண்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த ர. சஞ்சீவ்காந்தி (45), விழுப்புரம், வெங்கமேட்டைச் சோ்ந்த பா.சரவணன் (35), மிதிவண்டியில் வந்த விழுப்புரம் ர.சரசுவதி (36) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com