வாகனம் மோதியதில் மூதாட்டி பலி

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 55 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் பெருங்காப்பூா் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புதன்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அந்தப் பகுதியினா் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மூதாட்டியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். உயிரிழந்த மூதாட்டி யாா், விபத்துக்கு காரணமானவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com