விழுப்புரம் காக்குப்பம் பகுதியில் குதிரை கடித்ததில் இருவா் காயமடைந்தனா்.
விழுப்புரம் காக்குப்பம், பொய்யப்பக்கம் பகுதிகளில் கோயிலுக்கு நேந்துவிட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், பொய்யப்பாக்கத்தைச் சோ்ந்த ஜெயராமன், பத்மநாபன் ஆகியோரை ஒரு குதிரை ஞாயிற்றுக்கிழமை கடித்துவிட்டது. இதில் காயமடைந்த இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.