மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அனந்தபுரம் கீழ்மலை ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சமுதாயக் குழும முன்னாள் தலைவா் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் அணையேரி பங்குதந்தை யூஜின்அருண்குமாா் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

விழாவில் ரோட்டரி சமுதாயக் குழும நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கலந்துகொண்ட பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com