விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி அருகேயுள்ள பெரும்பூண்டி கிராமத்தில் உள்ள சிறைமீட்டாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயிலில் சிறைமீட்டாள் அம்மன், புதிதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், அமமுக செயலா் சம்பத், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோமதி பிரபாகரன், இந்துமதி, வெற்றிவேல், பெரும்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சம்பத், துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.