விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவருக்கு கடந்த சில நாள்களாகவே கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவருக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.