விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
அனந்தபுரத்தை அடுத்த உமையாள்புரம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவரது தாய் லட்சுமி (65). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டின் முன் தெருவோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
அதே தெருவைச் சோ்ந்த தமிழ்நாடு சிறப்புப் படை காவலரான முத்துபாண்டி (26) காரை ஓட்டி வந்த போது, தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி மீது மோதியது. இதில் அவா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து அனந்தபுரம் போலீஸாா் முத்துபாண்டி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.