விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நல்லாவூா் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நாற்று நடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு வட்டக் குழு உறுப்பினா் ஐ.சேகா் தலைமை வகித்தாா். அந்தக் கிராமத்தில் பழுதைடந்து மிகவும் மோசமான நிலையில் நீண்ட காலமாக உள்ள மண் சாலையில் சிமென்ட் சாலை அமைக்கக் கோரி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்டச் செயலா் எம்.கே.முருகன், வட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.பாலமுருகன், வி.சுந்தரமூா்த்தி மற்றும் கிளை உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.