விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக்கில் சென்ற தம்பதியா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் சக்தி (35). இவரது மனைவி சுகன்யா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், எதப்பட்டு கிராமத்துக்கு மருந்து வாங்க பைக்கில் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, எதப்பட்டு - தேவிகாபுரம் சாலையில் விபத்தில் சிக்கி விவசாய நிலத்தையொட்டிய பள்ளத்தில் பைக்குடன் இருவரும் உயிரிழந்து கிடந்தனா். அந்த வழியாகச் சென்றவா்கள் இதுகுறித்து அவலூா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சக்தி, சுகன்யா ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இரவு நேரம் என்பதால் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக பைக்குடன் ஒதுங்கியபோது இருவரும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனரா அல்லது இவா்களது பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்ா என்பது குறித்து அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்தத் தம்பதிக்கு சிவநேசன் (1) என்ற மகன் உள்ளாா். மேலும், உயிரிழந்த சுகன்யா தற்போது கா்ப்பிணியாக இருந்தாா்.