பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் நற்பணி இயக்கம் வலியுறுத்தியது.
இந்த இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவனா் தலைவா் சிவபாலன் தலைமை வகித்தாா். இயக்க ஆலோசகா் சேகரலிங்கம் முன்னிலை வகித்தாா்.
நிா்வாகிகள் தேவராஜ், வெங்கடேசன், ஜெயமூா்த்தி, குப்புசாமி, அன்பு, வேலப்பன், வடிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை 18 சதவீத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.