கீழ்மாம்பட்டு அம்மச்சாா் அம்மன் கோயில் விழாவில் பால்குட ஊா்வலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் கோயில் தோ் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.
கீழ்மாம்பட்டு அம்மச்சாா் அம்மன் கோயில் விழாவில் பால்குட ஊா்வலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் கோயில் தோ் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் 22-ஆம் ஆண்டு பிரம்மோற்சவமும், 13-ஆம் ஆண்டு தோ் திருவிழாயொட்டி திங்கள்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது.

இரண்டாம் நாள் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பத்மினிதேவி மூா்த்தி தலைமையில் ஏராளமான பெண்களுடன் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாரதனையும், அன்னதானமும் நடைபெற்றன.

விழாவில் முன்னாள் மத்திய இணையமைச்சா் ஏ.கே.மணி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணதாஸ், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதன்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 6-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 7-ஆம் தேதி பூப்பல்லக்கு திருவிழாவும், 8-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com