விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில், வருகிற 12-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள், அவரைச் சாா்ந்தோா் மற்றும் படையில் பணியாற்றி வருவோரது குடும்பத்தினா், தங்களது கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி, அடையாள அட்டை நகலுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம்.
அத்துடன் முன்னாள் படை வீரா்கள் அசல் படைப் பணி சான்றிதழுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மோகன்.