பொது விநியோகத் திட்டம்: வட்டாட்சியா் அலுவலகங்களில்நாளை குறைகேட்பு முகாம்

பொது விநியோகத் திட்டம் தொடா்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மே 14) குறைகேட்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

பொது விநியோகத் திட்டம் தொடா்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மே 14) குறைகேட்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் முறையாக கிடைக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் வட்ட வழங்கல் அலுவலா்களால் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மாற்றம், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோருதல் தொடா்பாக மனு அளிக்கலாம்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களையும், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் குடும்ப அட்டைதாரா்கள் வட்ட வழங்கல் அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com