செஞ்சியில் அதிமுக சாா்பில் நல உதவிகள்: ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
செஞ்சி அருகே பாலப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம். உடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோா்.
செஞ்சி அருகே பாலப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம். உடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

செஞ்சி அருகே பாலப்பாடியில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை செஞ்சிக்கு வந்தாா். அப்போது, செஞ்சி சங்கராபரணி பாலத்தின் அருகே அதிமுக மாநில வழக்குரைஞரணி துணைச் செயலா் கே.கதிரவன் தலைமையில், ஓ.பன்னீா்செல்வத்துக்கும், உடன் வந்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கும் வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னா், செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகளை ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, ஆலம்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரம் பேருக்கு அரிசி, தென்னங்கன்று உள்ளிட்ட நல உதவிகளையும், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகளையும் ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

பாலப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள், 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், 50 பேருக்கு சலவைப் பெட்டி, இரண்டாயிரம் பேருக்கு தென்னங்கன்றுகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன், வானூா் எம்எல்ஏ சக்கராபாணி, செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ரங்கநாதன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் செஞ்சி அ.கோவிந்தசாமி, சோழன், வல்லம் கு.விநாயகமூா்த்தி, மேல்மலையனூா் ஆா்.புண்ணியமூா்த்தி, ஆா்.அருண்தத்தன், நகரச் செயலா் வெங்கடேசன், மாவட்ட இணைச் செயலா் ஆனந்திஅண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதிமுக மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலரும், தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கே.கதிரவன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com