திமுக அரசின் ஓராண்டு சாதனைவிளக்க பொதுக்கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

விழுப்புரம் அருகே கெடாரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அருகே கெடாரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காணை தெற்கு ஒன்றியச் செயலா் கல்பட்டு ராஜா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வேம்பி ரவி, ரவிதுரை, மும்மூா்த்தி, நயினாமுகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். காணை வடக்கு ஒன்றியச் செயலா் முருகன் வரவேற்றாா்.

மாநில துணை பொதுச் செயலரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி, மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, கட்சியின் சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சுபா சந்திரசேகா், மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் நளினி சாரங்கன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், மாநில விவசாய அணி துணைச் செயலா் அன்னியூா் சிவா, காணை ஒன்றியக் குழுத் தலைவா் கலைச்செல்வி, மாவட்டப் பிரதிநிதி சிவக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் செல்வம், ரவிச்சந்திரன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கெடாா் கிளைக் கழகச் செயலா் மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com