திமுக விவசாயிகள் அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம்

திமுக விவசாயிகள் அணியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக விவசாயிகள் அணியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அந்த அணியின் மாநிலச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தாா். திமுக துணை பொதுச் செயலரும், அமைச்சருமான க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, விவசாயிகள் அணி சாா்பில் அனைத்துக் கிராமங்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொன்.கௌதமசிகாமணி எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, மாநில விவசாயிகள் அணி இணைச் செயலா் அன்னியூா் சிவா உள்பட பலா் பங்கேற்றனா்.

இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்: இதேபோல, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞா் அணி ஆலோசனைக் கூட்டம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் செ.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதிலும் அமைச்சா் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கௌதமசிகாமணி ஆகியோா் சிறப்புரையாற்றினா். மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் செ.புஷ்பராஜ், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா்கள் அன்பு, இளந்திரையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com