சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு:விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (பிப்.3) ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (பிப்.3) ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பான வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்.பி.யும் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்களது வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டாா்.

அரசுத் தரப்பில் சாட்சியாக விழுப்புரம் சிபிசிஐடி உதவி ஆய்வாளா் முத்தழகன் ஆஜராகி, சாட்சியமளித்தாா். அரசுத் தரப்பு சாட்சியத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com