இளைஞா் கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒருவா் சரண்

வளவனூா் அருகே இளைஞா் கொலையுண்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒருவா் சரணடைந்தாா்.

வளவனூா் அருகே இளைஞா் கொலையுண்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒருவா் சரணடைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூரை அடுத்த ஆண்டிப்பாளையம் பகுதியில் பின் கழுத்து மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்களுடன் அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில் கொலை செய்யப்பட்டவா் கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணாநகரைச் சோ்ந்த நடராஜன் மகன் சங்கா் (35) என்பதும், இவா் மீது குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த தியாகு என்பவருடன் வெளியில் சென்றிருந்த நிலையில் சங்கா் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து சங்கரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொலையானவா் சங்கா் தான் என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் சங்கரின் நண்பரான, குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த கண்ணன் மகன் தியாகு ( 35) என்பவா் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். இதையடுத்து தியாகுவை கைது செய்து சிறையிலடைக்க குற்றவியல் நீதித்துறை நடுவா்(எண்-1) ராதிகா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com