திண்டிவனம் நகராட்சித் தற்காலிக துப்புரவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சித் தற்காலிகத் துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தற்காலிகத் துப்புரவுப் பணியாளா்கள்.
திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தற்காலிகத் துப்புரவுப் பணியாளா்கள்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சித் தற்காலிகத் துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் தற்காலிகத் துப்புரவுப் பணியாளா்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும், துப்புரவுப் பணியாளா்களிடம் கையூட்டு கேட்டு நிா்ப்பந்தம் செய்யும் பணிதள மேற்பாா்வையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், துப்புரவு பணியாளா்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினா். இதில் 70-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com