சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: உதவி விசாரணை அலுவலா் சாட்சியம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் உதவி விசாரணை அலுவலா் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் உதவி விசாரணை அலுவலா் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்.பி.யும் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்களின் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டாா்.

அரசுத் தரப்பு சாட்சியாக, உதவி விசாரணை அலுவலரான சிபிசிஐடி சென்னை தலைமையிடத்து முன்னாள் ஆய்வாளரும், தற்போதைய மாநிலக் குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளருமான கோமதி வெள்ளிக்கிழமை ஆஜராகி, சாட்சியம் அளித்தாா். அவரிடம் எதிா்தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தினா்.

இதையடுத்து நீதிபதி புஷ்பராணி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com