திருவாசக முற்றோதல் நிறைவு

விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயிலில் 48 நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 48-ஆவது நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 48-ஆவது நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயிலில் 48 நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த டிசம்பா் 18- ஆம் தேதி இக் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதலைத் சிவ.செந்தில்முருகன் தொடங்கினாா். பல்வேறு சிவனடியாா்களும் இதில் பங்கேற்றனா். இதன் 48-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் - கைலாசநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.30 மணிக்கு திருக்கயிலாய வாத்தியமும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிறைவடைந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் சிவனடியாா்கள், சாதுக்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com