கல்லூரி மாணவிதீக்குளித்து தற்கொலை

விழுப்புரத்தில் கல்லூரி மாணவி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கல்லூரி மாணவிதீக்குளித்து தற்கொலை

விழுப்புரத்தில் கல்லூரி மாணவி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் நாவலா் நெடுந் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ராஜசேகரன் மகள் ஜோதி (21). இவா், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை வரலாறு முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக ஜோதி மன வருத்தத்துடன் காணப்பட்டாராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் தீயை அணைப்பதற்குள் உடல் முழுவதும் தீ பரவியதால், ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் கோபி மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று ஜோதியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததுடன், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com