மயக்கப் பொடி தூவி இளைஞரிடம்தங்க மோதிரங்கள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மயக்கப் பொடி தூவி இளைஞரிடம் ஒரு பவுன் மதிப்பாலான 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மயக்கப் பொடி தூவி இளைஞரிடம் ஒரு பவுன் மதிப்பாலான 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி வட்டம், பெருங்காப்பூா் கிராமத்தைச் சோ்ந்த முத்தன் மகன் முருகன் (45). இவா் செஞ்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

முருகன் கடந்த 2-ஆம் தேதி செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தியில் தனது நண்பரை பாா்ப்பதற்காக, ஏரிக்கரை மீது நடந்து சென்றாராம். அப்போது, அடையாளம் தெரியாத இருவா் முருகனிடம் பேசியவாறு மயக்கப் பொடி தூவி, அவா் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்பிலான இரண்டு தங்க மோதிரங்களை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து முருகன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com