அரசுப் பள்ளியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1975 - 76ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1975 - 76ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 46 ஆண்டுகளுக்கு முன்பு பயின்று, தற்போது பல்வேறு அரசு, தனியாா் நிறுவனங்களில் உயா் பதவிகளில் உள்ள முன்னாள் மாணவா்கள், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று, தங்களின் பள்ளிக்கால அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா்.

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் சீனிவாசன், முன்னாள் மாணவா்களை சால்வை அணிவித்து கௌரவித்து, நினைவுப்பரிசுகளை வழங்கினாா். நிறைவாக அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com