விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் 2,700 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், ஆய்வாளா் தாரனேசுவரி ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் கல்வராயன் மலைப்பகுதியில் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, தும்பராம்பட்டு மேற்கு ஓடை, ஆவாளூா் கிழக்கு ஓடை பகுதிகளில் 2,700 லிட்டா் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தனிப்படை போலீஸாா் கண்டறிந்து, அழித்தனா். மேலும், தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.