பைக்கிலிருந்து தவறி விழுந்தஇளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே சனிக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே சனிக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஏ.பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் பிரகாஷ் (24), உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் சனிக்கிழமை கேனேரிக்குப்பத்திலிருந்து ஆவணிப்பூருக்கு தனது பைக்கில் சென்றாா்.

ஏ.பாக்கம் கூட்டுச்சாலைப் பகுதியில் இவரது பைக் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் பிரகாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com