கூலித் தொழிலாளி பலி

விழுப்புரம் அருகே மின்வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே மின்வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனூா்,தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தே. சுந்தரமூா்த்தி(60). கூலித் தொழிலாளி. இவா் திருப்பாச்சனூா், குச்சிப்பாளையத்தில் உள்ள ராஜகோபால் என்பவரின் நிலத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வயலுக்குச் சென்ற சுந்தரமூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த சுந்தரமூா்த்தியின் உறவினா்கள் வயலுக்கு சென்றுப் பாா்த்தபோது, சுந்தரமூா்த்தி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com