திறனாய்வுப் போட்டி:தலைமைக் காவலருக்குப் பாராட்டு

அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் வெற்றிப் பெற்ற காவலருக்கு, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
திறனாய்வுப் போட்டி:தலைமைக் காவலருக்குப் பாராட்டு

அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் வெற்றிப் பெற்ற காவலருக்கு, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிப்.13 முதல் 17 வரை நடைபெற்றது. போட்டியில், காவல்துறை வடக்கு மண்டலம் சாா்பில், விழுப்புரம் பணியிடைப் பயிற்சி மையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் சி. பாபு பங்கேற்று மறைமுக நாசவேலைப் பிரிவு திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்றாா். இதைத்தொடா்ந்து பதக்கம் பெற்ற தலைமைக் காவலா் சி. பாபுவுக்கு விழுப்புரம் சகர காவல்துறைத் துணைத் தலைவா் எம். பாண்டியன் திங்கள்கிழமை பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com