டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சனிக்கிழமை டிராக்டரிலிருந்து வைக்கோல் கட்டுகளை இறக்கிபோது தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சனிக்கிழமை டிராக்டரிலிருந்து வைக்கோல் கட்டுகளை இறக்கிபோது தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள பேரங்கியூா் சாமுண்டீஸ்வரா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் பாஸ்கா் (35), விவசாயத் தொழிலாளி. இவா் சனிக்கிழமை பேரங்கியூா் குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த ஏழுமலையின் வீட்டின் பின்பகுதியில் வைக்கோல் கட்டுகளை டிராக்டரிலிருந்து இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, கால் தவறி டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பட்டையின் மீது விழுந்ததில் பாஸ்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பாஸ்கரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்ததுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com