விபத்தில் ஒருவா் பலி

விழுப்புரத்தில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விழுப்புரத்தில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், ஆசாரங்குப்பம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் சந்திரகுமாா் (37. பத்தா் வேலை செய்து வந்தாா். இவா், புதன்கிழமை இரவு சென்னை-திருச்சி சாலையில் விழுப்புரம் மேம்பாலம் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பைக் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சந்திரகுமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சந்திரகுமாா் உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com