விழுப்புரத்தில் இரும்புப் பொருள்களைத் திருடிச் செல்ல முயன்ாக 3 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
விழுப்புரம், புதுச்சேரி, கடலூா் வழியாக நாகப்பட்டினத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி,விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்புக் கம்பிகள், சிமென்ட் மூட்டைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
மேம்பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் மேலாளா் சா. ஷாருக்கான், வியாழக்கிழ மை ஜானகிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மூன்று பெண்கள் அங்கிருந்து இரும்புப் பொருள்களைத் திருட முயன்றனராம். இதைத் தொடா்ந்து, ஷாருக்கான் அவா்களைப் பிடித்து, விழுப்புரம்
தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில் அவா்கள் வழுத ரெட்டி பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி செல்வி(50), பழனிச்சாமி மனைவி புஷ்பவள்ளி (42), சின்னதுரை மனைவி அன்சியா (28) எனத் தெரிய வந்தது.
இவா்கள் மூன்று போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.