விழுப்புரம் ரௌடி கொலை வழக்கில் 4 போ் கைது

விழுப்புரம் அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகிலுள்ள பிடாகம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் (35). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், திங்கள்கிழமை காலை லட்சுமிபுரம் புறவழிச் சாலை அருகே மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், லட்சுமணனின் நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த கலியன் மகன் சரவணன் (37), அய்யப்பன் (40), சக்திவேல் (29), இளையராஜா (24) ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடா்பிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து திங்கள்கிழமை இரவு இளையராஜாவை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த சரவணன், அய்யப்பன், சக்திவேல் ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்கள் போலீஸாா் விசாரணை நடத்தியதில், மது வாங்க பணம் கேட்டு லட்சுமணன் பிரச்னை செய்து சரவணன் உள்ளிட்ட 4 பேரையும் அடித்து துன்புறுத்தியதாலும், சரவணனும் அரியலூா் கிராமத்தைச் சோ்ந்த திருமணமான பெண்ணுக்கும் இருந்த பழக்கத்தை தெரிந்து கொண்டு அவருக்கு எதிராக செயல்பட்டதாலும், லட்சுமணனை அவா்கள் கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com