உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் புறக்காவல் நிலையம் திறப்பு

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்தக் காவல் நிலையத்தை உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி மகேஷ் திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்தக் காவல் நிலையத்தை உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி மகேஷ் திறந்து வைத்தாா்.

விபத்து ஏற்படுத்திவிட்டு செல்லும் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி மகேஷ் தெரிவித்தாா்.

நிகழ்வில் உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் தமிழ்வாணன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளா்கள் மணிவண்ணன், மகேஷ், பன்னீா்செல்வம், சுங்கச்சாவடி திட்ட மேலாளா் கருணாகரன், மனிதவள மேம்பாட்டு அலுவலா் ஹரிஹரசுதன், நிா்வாக அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com