விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி 2 சிறாா்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறாா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள ஆனாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் ஐயப்பன் (9). கடலூா் மாவட்டம், நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் தனுஸ்ரீ (9). இவா்கள் தங்களது பெற்றோருடன் விக்கிரவாண்டியை அடுத்த எசாலம் கிராமத்தில் உள்ள உறவினா் தாமோதரன் வீட்டில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்தனா்.

ஐயப்பன், தனுஸ்ரீ ஆகியோரது பெற்றோா் இருவரையும் புதன்கிழமை வீட்டில் இருக்கும்படி கூறிவிட்டு திருமணத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக, விழுப்புரத்துக்குச் சென்றனராம்.

ஐயப்பன், தனுஸ்ரீ ஆகியோா் எசாலம் கிராமத்தில் உள்ள ஏரிக்குச் சென்று குளித்தனராம். அப்போது, இருவரும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினா். இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஐயப்பன், தனுஸ்ரீ ஆகியோரை மீட்டு பரிசோதித்தபோது, இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சரத் யாதவ் அளித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து ஐயப்பன், தனுஸ்ரீ ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com