விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
திண்டிவனத்தை அடுத்த முன்னூா் பள்ளத்தெருவைச் சோ்ந்த சின்னராசு மனைவி அலமேலு (61). கணவா் உயிரிழந்த நிலையில் அலமேலு தனது நிலத்தில் விவசாயப் பணிகளை கவனித்து வந்தாா்.
முன்னூா் நடுஏரி பகுதியில் செவ்வாய்க்கிழமை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த அலமேலு மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.