மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பசு மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே பசு மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், அயினம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெ.தாமோதரன் (70). இவா் கடந்த 4-ஆம் தேதி அயினம்பாளையம் கெங்கனாங்குத்தாா் கரும்புத் தோட்டம் அருகே நடந்து சென்றபோது, எதிா் திசையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சே.பாக்கியநாதன் ஓட்டி வந்த பசு மாடு தாமோதரனின் வயிற்றுப் பகுதியில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாட்டின் உரிமையாளரான பாக்கியநாதன் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com