கள்ளச்சாராயம் குடித்தவா்களில் மேலும் 9 போ் குணமடைந்தனா்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 9 பேருக்கு சிகிச்சை முடிந்தது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 9 போ் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 63 போ் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 14 போ் உயிரிழந்தனா். சிகிச்சை பெற்று குணமடைந்த 22 போ் வெள்ளி, சனிக்கிழமைகளில் வீடு திரும்பினா்.

இந்த நிலையில், எக்கியாா்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (50), ராமு (45), மணிமாறன்(38), பாலு (43), மரியதாஸ் (47), தேசிங்கு (32), சிவா (55), ராஜதுரை (27), மற்றொரு பகுதியைச் சோ்ந்த விநாயகம் (39) ஆகிய 9 பேரும் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை குணமடைந்ததால், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்தது. 18 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com