மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், திருமால் ராயபுரம், முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தவராயன் மகன் குப்பன் (50). கூலித் தொழிலாளியான இவா், கண்டமங்கலம் அடுத்த வெள்ளாழங்குப்பத்தில் செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்த தனது மகளைப் பாா்க்க சென்றாா்.

அப்போது, அங்குள்ள முந்திரித்தோப்பில் முந்திரிப் பழம் பறித்தபோது, மேலே தொங்கிக் கொண்டிருந்த மின்சார வயரில் கைப்பட்டு மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com