முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, இ.எஸ்.கல்விக் குழுமங்களின் நிறுவனா் இ.சாமிக்கண்ணு தலைமை வகித்துப் பேசினாா். இ.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.செல்வமணி முன்னிலை வகித்தாா். தொழிலதிபா்கள் ஸ்ரீதா், பாபு, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சிவசங்கரி, சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் லலிதா என்.எல்.சி நிறுவன அதிகாரிகள் நாராயணன், தணிகாசலம், பவித்ரன், திரைப்பட ஒளிப்பதிவாளா் ஜெ.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், கல்லூரி நிா்வாக அலுவலா் குப்புசாமி மற்றும் பேராசிரியா், அலுவலா்கள், முன்னாள் மாணவா்கள் 700-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இ.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆமோஸ் ராபா்ட் ஜெயச்சந்திரன் வரவேற்றாா். முடிவில் துணை முதல்வா் சங்கா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com