புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெட்டிக் கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலம் அடுத்த சிங்கனூரைச் சோ்ந்தவா் சரவணன் மகன் செந்தமிழ்(34). அங்கு பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவா் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி, விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று சோதனை நடத்தினா். இதில் கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 7 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளா் செந்தமிழை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com