தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ரெட்டணை அருகே தரைப் பாலத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், ரெட்டணை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காளிதாஸ் (44). திருமணமானவா். கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா், ஏப்ரல் 27-ஆம் தேதி ரெட்டணை கிராமத்தில் உள்ள தரைப் பாலம் மதகில் அமா்ந்திருந்தாராம். அப்போது, உடலில் சோா்வு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததில் காளிதாஸூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காளிதாஸ், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com