திருப்பாவை - பாடல் 12

கண்ணனின் காலத்தில் ஆய்ப்பாடியில் வாழ்ந்த அனைவரும் இடையர் குலத்தைச் சார்ந்தவரே.
Published on
Updated on
1 min read



   கனைத்து இளங்கற்று எருமை கன்றுக்கு இரங்கி

   நினைத்து முலை வழியே நின்று பால் சோர

   நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

   பனித் தலை வீழ நின் வாசற்கடை பற்றி

   சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

   மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

   இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

   அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்



பாடியவர் பவ்யா ஹரி, சென்னை - 44

</p><p align="JUSTIFY"><strong> </strong></p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கண்ணனின் காலத்தில் ஆய்ப்பாடியில் வாழ்ந்த அனைவரும் இடையர் குலத்தைச் சார்ந்தவரே. எனவே அவர்களின் தொழில் மாடு மேய்ப்பதும், பால் கறப்பதுமாக இருந்து வந்தது. ஆனால் அந்த ஆய்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒருவன் மட்டும், தனது குலத் தொழிலை அனுசரிக்காமல், முழு நேரமும் கண்ணனுக்கு சேவைகள் செய்வதில் ஈடுபட்டு இருந்தான் போலும். அவனது வீட்டில் இருந்த எருமை மாடுகளின் தன்மை குறிப்பிடப்பட்டு, அவனது தங்கையை நோக்கி பாடும் பாடலாக அமைந்துள்ளது.<br /> </p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">இளங்கன்றுகளை உடைய எருமை மாடுகள், கனைத்தவாறு தங்களது கன்றுகளுக்கு பால் ஊட்டும் நினைப்பினில், எவரும் கறக்காமலே, தாமே பால் காம்பின் மூலம் பால் சொரிகின்றன. அவ்வாறு இடைவிடாது சொரியப்படும் பால் வீட்டினை நனைத்து வீடு முழுவதும் சேறாக மாற்றுகின்றது. அத்தகைய வளமான செல்வமாகிய எருமை மாடுகளை உடைய செல்வனது தங்கையே, உனது வீட்டு வாசலில் உனக்காக காத்திருக்கும் எங்களது தலையில் பனி விழுந்து எங்களை நனைக்கின்றது. நாங்கள் அனைவரும் சேர்ந்து, தென் இலங்கைக்கு அரசனாக விளங்கிய இராவணன் மீது கோபம் கொண்டு அவனை வென்றவனும், நமது மனங்களுக்கு இனியனவாகவும் திகழும் இராமபிரானின் புகழினைப் பாடுகின்றோம். ஆனால் நீயோ வாய் திறவாமல் இருக்கின்றாய், இந்த ஊரினில் உள்ள அனைவரும் எழுந்து விட்டார்கள். நாங்கள் உனது வீட்டின் வாசலில் திரண்டு நிற்பதை இந்த சேரியில் உள்ள அனைவரும் அறிந்து கொண்டார்கள். ஆனால் நீயோ இன்னும் உறக்கம் கலையாமல் இருகின்றாய். இப்போதாவது உறக்கம் கலைந்து எழுந்து எங்களுடன் இணைந்து கொள்வாயாக.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com