திருப்பாவை - பாடல் 15

உள்ளே படுக்கையில் படுத்துப் புரளும் பெண்ணுக்கும், வெளியே இருக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்று
Published on
Updated on
2 min read



  எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

   சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

   வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

   வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக

   ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

   எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்

   வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

   வல்லானை மாயனைப் பாடலேர் எம்பாவாய்
 

பாடியவர் பவ்யா ஹரி

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">உள்ளே படுக்கையில் படுத்துப் புரளும் பெண்ணுக்கும், வெளியே இருக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. தன்னிடம் இல்லாத குற்றத்தை, தான் கொண்டுள்ள குற்றமாக வைணவ அடியார்கள் கூறினால், அதனை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது, சிறந்த வைணவனின் இலக்கணம் என்று கருதப்படுகின்றது. அந்த தன்மையை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் கருதப்படுகின்றது. வெளியே உள்ளவர்கள், உள்ளே இருக்கும் சிறுமியை நோக்கி, நீ பேச்சில் வல்லமை உடையவள் என்று நாங்கள் அறிவோம் என்று கூற, அதற்கு உள்ளே இருக்கும் சிறுமி, நீங்கள்தான் பேச்சில் என்னை விடவும் வல்லவர்கள், இருந்தாலும் நீங்கள் சொல்கின்றபடி நானே பேச்சில் வல்லவளாக இருந்து விடுகின்றேன் என்று பதில் கூறி, அடக்கமாக தன்னிடம் இல்லாத குற்றத்தையும் தனது குற்றமாக ஏற்றுக்கொள்ளுதல் இங்கே விளக்கப்படுகின்றது. இந்த பாடலுடன் சிறுமிகள் எழுப்பும் வகையில் அமைந்த பாடல்கள் முடிவடைகின்றன.</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">வெளியே இருக்கும் பெண்கள்: இளமைத் தோற்றத்திலும், இனிமையான பேச்சிலும் கிளி போன்றவளே, நாங்கள் அனைவரும் உனது வீட்டின் வாசலில் நிற்கின்றோம், நீ இன்னும் உறங்குகின்றாய் போலும்.</p><p align="JUSTIFY">உள்ளே இருப்பவள்: கிளி என்று கிண்டலாக கூப்பாடிட்டு என்னை அழைக்காதீர்கள், நான் முன்னமே எழுந்துவிட்டேன், இப்போது வெளியே வந்துகொண்டிருகின்றேன்.</p><p align="JUSTIFY">வெளியே இருப்பவர்கள்: பெண்ணே நீ பேசுவதில் மிகவும் வல்லமை பெற்றவள். இதனை நாங்கள் நெடுநாட்கள் முன்னரே அறிந்துகொண்டோம்.</p><p align="JUSTIFY">உள்ளே இருப்பவள்: நீங்கள்தான் என்னை விடவும் பேச்சில் வல்லவர்கள். இருந்தாலும் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் இப்போது என்ன செய்யவேண்டும் நீங்கள் கூறுவீர்களாக.</p><p align="JUSTIFY">வெளியே இருப்பவர்கள்: விரைந்து வந்து எங்களுடன் நீ சேர்ந்து கொள்வாயாக. சாமர்த்தியமான பேச்சுத் திறமையைத் தவிர்த்து, நீ வேறு என்னென்ன குணங்களை வைத்துள்ளாய்.</p><p align="JUSTIFY">உள்ளே இருப்பவள்: நோன்பிற்கு வர வேண்டியவர்கள் அனைவரும் வந்து விட்டார்களோ.</p><p align="JUSTIFY">வெளியே இருப்பவர்கள்: அனைவரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வெளியே வந்து எண்ணிக்கொள்ளலாம். .</p><p align="JUSTIFY">உள்ளே இருப்பவள்; இப்போது நாம் அனைவரும் செய்யவேண்டியது என்ன.</p><p align="JUSTIFY">வெளியே இருப்பவர்கள்: வலிமை மிகுந்த குவலாபீடம் என்ற யானையினைக் கொன்றவனும், பகைவர்களின் செருக்கினை அழிக்கும் திறமை படைத்தவனும், பல மாயச் செயல்கள் புரிபவனும் ஆகிய கண்ணனின் பெருமைகளை நான் அனைவரும் சேர்ந்து பாடுவோம்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com