Enable Javscript for better performance
ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்காத அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: பழ.நெடுமாறன் - Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்காத அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

    By பெங்களூரு  |   Published On : 02nd May 2016 12:18 AM  |   Last Updated : 02nd May 2016 08:08 AM  |  அ+அ அ-  |  

    neduma

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்க முன்வராத அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை தினமணி நிருபரிடம் அவர் கூறியது: ஈழத்தமிழர்களின் பிரச்னை முன்பைக் காட்டிலும் இப்போதும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களர்களின் குடியேற்றம் அதிகமாக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் வணிகம், தொழில் உள்ளிட்டவை முழுமையாக சிங்களர்களின் கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிங்களர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய பரிதாபநிலைக்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 10 தமிழர்களுக்கு ஒரு ராணுவவீரர் என்ற கணக்கில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, ராணுவத்தின் மேலாதிக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அபாயகரமான சூழலால் இப்போதும் ஈழத்தமிழர்கள் அச்சத்தில் வாழ வேண்டிய பரிதாப நிலையே உள்ளது. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் எந்த அரசியல் கட்சியும் வாய்திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்க முன்வராத அரசியல் கட்சிகளை அடையாளம்கண்டு, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    தமிழ்நூலகம் சூறை: பெங்களூரில் செயல்பட்டு வந்த திருக்குறள் மன்றத்தின் தமிழ்நூலகம் சூறையாடப்பட்டு, அங்கிருந்த தமிழ்நூல்கள் வீதியில் வீசப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் உலகத் தமிழர்களை வேதனை அடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலகத்தை அழிப்பது உயர்ந்த பண்பாட்டைச் சிதைப்பதற்கு ஈடாகும். எனவே, தமிழ்நூலகத்தை பழையபடி செயல்படவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தநூலகத்திற்கு நான் எழுதிய நூல்கள் தவிர 150 நூல்களை அன்பளிப்பாக அளிக்கிறேன் என்றார் அவர்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp