வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் அரசு அல்லது அரசு சார்ந்த உத்தியோகம் அமையும். லக்னாதிபதி பாக்கியாதிபதியின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் அந்தஸ்தான வாழ்க்கை அமையும். தொழில் ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். களத்திர, நட்பு மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியான சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதாலும் தற்சமயம் சனி மஹாதசை நடப்பதாலும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.