ஜோதிட கேள்வி பதில்கள்
என் தாயார் இறந்த சோகத்தில் இருந்த நான், சம்பிரதாய சடங்குகள், காரியம் எல்லாம் முடிந்த பிறகு கோயில் குருக்களிடம் என் தாயார் இறந்துவிட்டதைச் சொல்ல கோயிலுக்குச் சென்றேன். குருக்கள் வரும் வரை உட்கார்ந்திருந்தேன். அப்போது என் வலது தோளில் காகம் ஒன்று அமர்ந்தது. இது நல்லதா? எத்தகைய வேலை வாய்ப்பு அமையும்? - வாசகர், கோயம்புத்தூர்
உங்கள் அன்னை சரியான காலத்தில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை உங்கள் ஜாதகம் உறுதி செய்கிறது.
உங்கள் அன்னை சரியான காலத்தில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை உங்கள் ஜாதகம் உறுதி செய்கிறது. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு உங்களுக்கு சிறப்பான அரசு உத்தியோகம் கிடைக்கும். மற்றபடி காகத்தின் மூலம் மூதாதையர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை. காகமே உங்கள் அருகில் வந்து உணவு எடுத்துச் செல்வது நன்மை பயக்கும் என்றால் மிகையில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும்.